கீழ்பெண்ணாத்து அருகே பாம்பு கடித்து விவசாயி பலி

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்து அருகே, பாம்பு கடித்து விவசாயி பலியானார்.

Update: 2022-02-21 07:45 GMT

பாம்பு கடித்து இறந்த விவசாயி விஜயகுமார்

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்தூர் அருகே, நல்லான்பிள்ளை பெற்றாள் தேவனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 34), விவசாயி. இவருக்கு, நந்தினி என்ற மனைவியும், முகுந்தன் (3) என்ற மகனும் உள்ளனர்.

விஜயகுமார் கடந்த 18-ந் தேதி இரவு 8 மணி அளவில் வீட்டில் சாப்பிட்டுவிட்டு வெளியில் வந்தபோது பாம்பு கடித்து மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக அவரை சிகிச்சைக்காக திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கீழ்பெண்ணாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News