மழை பெய்ததால் சேறும் சகதியுமான சாலை

உள்ளாட்சி தேர்தலுக்குப் பிறகு சாலைகள் சீர் அமைக்கப்படும் என்று கூறியிருந்த நிலையில் தற்போதும் அதே நிலைதான் பொதுமக்கள் குற்றச்சாட்டு

Update: 2021-11-07 01:54 GMT

கீழ்நாச்சிபட்டு பகுதியில் உள்ள தீபஜோதி நகரில் தெருக்களில் தேங்கியிருக்கும் மழைநீர் 

திருவண்ணாமலை வட்டம் கீழ்நாச்சிபட்டு பகுதியில் உள்ள தீபஜோதி நகரில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். திருவண்ணாமலையில் பெய்த தொடர் மழையின் காரணமாக இப்பகுதிகளில் தேங்கி நிற்கும் மழை  நீரில் கொசு உற்பத்தியாகிறது. இதனால்,  டெங்கு சிக்குன்குன்யா, மலேரியா போன்ற நோய் பரவும் அபாயம் உள்ளது.

மேலும் மழை நீர் வெளியேற வழியில்லாமல் துர்நாற்றம் வீசுவதால், சுகாதார சீர்கேடு நிலவுகிறது. உள்ளாட்சி தேர்தலுக்முன்பு, தேர்தலுக்குப் பிறகு சரி செய்யப்படும் என்று அதிகாரிகள் கூறியிருந்தாலும், தேர்தல் முடிந்த பிறகும் இதே நிலைதான் தொடர்கிறது என பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் , மேலும் கீழ் நாச்சிபட்டு ஊராட்சி முழுவதும் பக்க கால்வாய் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

Similar News