கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வியாபாரிகளுடன் ஆய்வு கூட்டம்

திருவண்ணாமலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வியாபாரிகளுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு கூட்டம் நடத்தினார்

Update: 2022-01-04 15:38 GMT

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் கோவிட் - 19   தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வியாபாரிகள், உணவக உரிமையாளர்கள், தனியார் பேருந்து உரிமையாளர்கள், நகைக்கடை உரிமையாளர்கள் உள்ளிட்ட அனைத்து சங்க பிரதிநிதிகளுடன் ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

தற்போது கொரோனா அதிகரித்து வரும் சூழ்நிலையில் கடைகளில் சமூக இடைவெளி கடைபிடிப்பது பற்றியும் , தற்போது அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகள் பற்றியும் வியாபாரிகள் வரும் காலங்களில் செயல்படவேண்டிய முறைகள் பற்றியும் மாவட்ட ஆட்சியர் கலந்து ஆலோசித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கணேஷ்,  உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ராமகிருஷ்ணன் மற்றும் துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News