திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பிரதோஷ விழா

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பிரதோஷ விழா, விமரிசையாக நடைபெற்றது.

Update: 2021-10-18 14:00 GMT

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் திருக்கோயிலில், சோமவார பிரதோஷத்தை முன்னிட்டு அருள்பாலித்த ஸ்ரீ நந்தீகேஸ்வரர்.

திருவண்ணாமலையில், புகழ்பெற்ற் அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில்,  ஐப்பசி மாத பவுர்ணமி சோமவார பிரதோஷ விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. இதை முன்னிட்டு, ஸ்ரீ நந்தீகேஸ்வரர் மற்றும் ஸ்ரீ சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்,  வில்வம் சாற்றி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

அதை தொடர்ந்து, ஐந்தாம் பிராகரத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, கொரோனா விதிமுறைகளை பின்பற்றி, சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News