கிரிவலப்பாதையில் போலீஸ் பாதுகாப்பு

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பக்தர்கள் கிரிவலம் செய்யாமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Update: 2021-06-24 13:50 GMT

கொரோனா ஊரடங்கு காரணமாக தொடர்ந்து ஒரு வருடத்திற்கு மேல் திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் தடையில் உள்ளது. கொரோனா தொற்று குறைந்து வருவதாக அரசு அறிவித்த நிலையில் இன்று முதல் பல தளர்வுகளை வழங்கியுள்ளது.

அதில் கிரிவலத்திற்கு 15 மாதங்களுக்குப் பிறகு, இம்மாதம் அனுமதி கிடைக்குமா என்று பக்தர்கள் எதிர்பார்த்த நிலையில் இம்மாதம் 24-ஆம் தேதி பௌர்ணமி கிரிவலம் செல்ல அன்று அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இன்று திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் கிரிவலப்பாதையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News