திருவண்ணாமலையில் நாளை தடுப்பூசி போடப்படும் இடங்கள்

திருவண்ணாமலையில் நாளை தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து நகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது

Update: 2021-11-20 12:52 GMT

திருவண்ணாமலை நகராட்சி அலுவலகம்

திருவண்ணாமலை நகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,  தமிழ்நாடு அரசு பொது இடங்களில் தடுப்பூசி செலுத்தாமல் வர தடை விதித்துள்ளது, இதன்படி இனிமேல் ரேசன் கடை, மருத்துவமனை, கோவில், சர்ச், மசூதிகள், பூங்கா, திருமண மண்டபம் பள்ளி, கல்லூரிகள், துணிக்கடைகள், நகைக்கடைகள், ஹோட்டல் போன்ற எந்த இடத்திற்கும் செல்ல தடை உள்ளது.

நமது வீட்டை விட்டு வெளியே வந்தாலே தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். தடுப்பூசி செலுத்தியிருக்கவில்லையென்றால் தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்தின் படி நடவடிக்கைகள் எடுக்கப்படும். எனவே நாளை நடைபெறும் தடுப்பூசி முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. இரண்டு தவணை தடுப்பூசியும் கண்டிப்பாக செலுத்தியிருக்க வேண்டும். 

திருவண்ணாமலையில் நாளை தடுப்பூசி போடப்படும் இடங்கள்:

ஆரம்ப சுகாதார நிலையங்கள், பேருந்து நிலையம் ரயில்நிலையம், 

உழவர்சந்தை, பழைய நகராட்சி அலுவலகம், அண்ணாமலையார் திருக்கோயில் வளாகம்,

ஜெயின் மேல்நிலைப்பள்ளி காந்தி நகர், நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி தேரடி தெரு,

டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளி, நகராட்சி தொடக்கப்பள்ளி இராமலிங்கனார் தெரு,

சண்முகா பள்ளி செங்கம் ரோடு, நகராட்சி தொடக்கப்பள்ளி தாமரை நகர்,

தேனிமலை பள்ளிக்கூடத் தெரு, ரமணா நகர் சுகாதார நிலையம்,

கீழாத்தூர் காலனி ஆரம்ப சுகாதார நிலையம், ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவித்துள்ளது.

Tags:    

Similar News