இந்திய தரச்சான்று பெறாத மின்சாதனப் பொருட்கள் விற்பனைக்கு தடை - ஆட்சியர் அதிரடி

இந்திய தர நிர்ணய சான்று பெறாத வீட்டு உபயோக மின்சாதனப் பொருட்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்படுவதாக ஆட்சியர் தெரிவித்தார்.

Update: 2021-08-07 04:24 GMT

பைல் படம்.

இந்திய தர நிர்ணய சான்று பெறாத வீட்டு உபயோக மின்சாதனப் பொருட்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்படுவதாக திருவண்ணாாமலை ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாநில அரசுகள் தொழில் வணிக இயக்குனர்களை தனது கட்டுப்பாட்டில் உள்ள மாவட்ட பகுதிகளில் மின்சாதன பொருட்களுக்கான தரக்கட்டுப்பாட்டு செயலாக்க அலுவலர்களாக நியமித்துள்ளது.

இதன்படி சலவை எந்திரம், உணவக அரவை எந்திரம், முகச்சவர கருவி முதலிய இதர வீட்டு உபயோக மின்சாதனப் பொருட்கள் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் ஆகியோர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட தொழில் மையங்களில் பதிவு செய்ய வேண்டும். இந்திய தர நிர்ணய நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்ட பொருட்களை மட்டுமே விற்பனை செய்ய வெண்டும். தரம் குறைவான மற்றும் இந்திய தர நிர்ணய சான்று பெறாத பொருட்கள் விற்பனை செய்ய தடை செய்யப்படுகிறது.

எண்ணெய் அழுத்த அடுப்பு உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் ஆகியோர் தரம் குறைவான மற்றும் இந்திய தர நிர்ணய சான்று பெறாத பொருட்கள் விற்பனை செய்ய தடை செய்யப்படுகிறது. மின் கம்பி, மின் கம்பி வடம், மின் பாதுகாப்பு சாதனங்கள் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் ஆகியோர் தரம் குறைவான மற்றும் இந்திய தர நிர்ணய சான்று பெறாத பொருட்கள் விற்பனை தடை செய்யப்படுகிறது.

இதனை செயல்படுத்த, உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர் நிறுவன பதிவு, திடீர் ஆய்வு, தரம் குறைவான மற்றும் இந்திய தர நிர்ணய சான்று பெறாத பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை ஆகியவை மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மூலம் மேற்கொள்ளப்படும்.

மேலும் கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News