திருவண்ணாமலை நகராட்சி தலைவராக நிர்மலா பதவி ஏற்பு
திருவண்ணாமலை நகராட்சித் தலைவராக நிர்மலா பதவியேற்றுக் கொண்டார்.
திருவண்ணாமலை நகராட்சி தலைவராக போட்டியிடுவதற்கு பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் திருவண்ணாமலை நகராட்சி துவங்கி 126 ஆண்டுகளில் முதன்முதலாக திருவண்ணாமலை நகராட்சியின் முதல் பெண் தலைவராக நிர்மலா இன்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவருக்கு நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நகர மன்ற தலைவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.