திருவண்ணாமலையில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: இயக்குனர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில நாற்றங்கால் கூட்டுப் பண்ணை பணிகளை ஊராட்சித் துறை இயக்குனர் ஆய்வு செய்தார்.

Update: 2021-11-21 01:40 GMT

திருவண்ணாமலையில்  ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குனர் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் அருகில் மேற்கூரை மழைநீர் சேகரிக்கும் பணி நடைபெற்று வருவதை ஊரக வளர்ச்சி மற்றும் ஊரக துறை இயக்குனர் பிரவீன் நாயர் ஆய்வு செய்தார்.

பின்பு காட்டாம் பூண்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் நாற்றாங்கால் கூட்டுப்பண்ணை பணிகளை ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் முருகேஷ் கூடுதல் ஆட்சியர் பிரதாப் திட்ட இயக்குனர் சந்திரா, மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News