திருவண்ணாமலை நகராட்சியில் தூய்மை பாரதம் திட்டம் துவக்கம்

திருவண்ணாமலை நகராட்சி சார்பில் தூய்மை பாரதம் திட்டத்தை நகராட்சி ஆணையாளர் துவக்கி வைத்தார்.

Update: 2021-09-28 13:43 GMT

திருவண்ணமலையில் தூய்மை பாரதம் திட்டத்தை தொடங்கி வைத்த நகராட்சி ஆணையர்

திருவண்ணாமலை நகராட்சி சார்பில் தூய்மை பாரதம் திட்டம் 75வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் நிகழ்ச்சிகள் செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 3ஆம் தேதி வரை நடைபெறும் என நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் திருவண்ணாமலை நகராட்சி ஆணையாளர் சந்திரா தூய்மை பாரத திட்டத்தை துவக்கி வைத்தார். 

இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை நகராட்சி மேலாளர், சுகாதாரப் பணி ஆய்வாளர் ஆல்பர்ட் ராஜ்,  நகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News