நீர்வரத்து கால்வாய் புனரமைக்கும் பணி: அமைச்சர் ஆய்வு

திருவண்ணாமலையில் நீர்வரத்து கால்வாய் மற்றும் நீர் செல்லும் பாதை புனரமைக்கும் பணியை பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு ஆய்வு மேற்கொண்டார்

Update: 2021-10-16 07:53 GMT

நீர்வரத்து கால்வாய் புனரமைக்கும் பணியை ஆய்வு செய்த அமைச்சர் வேலு 

திருவண்ணாமலையில் வேங்கிக்கால் ஏரி,  முதல் நொச்சிமலை ஏரி வரை,  ஏரி வரத்து கால்வாய் மற்றும் நீர் செல்லும் பாதை புனரமைக்கும் பணி ஆகியவற்றினை திருவண்ணாமலையில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ வ.வேலு அவர்கள் ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார் .

இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் முருகேஷ்,  செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி,  அருணை மருத்துவக்கல்லூரி துணைத்தலைவர் மருத்துவர் எ. வ. வே. கம்பன் ,  முன்னாள் நகரமன்ற தலைவர் ஸ்ரீதரன், நகர கழக செயலாளர் கார்த்திக் வேல்மாறன் மற்றும் பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி துறை அதிகாரிகள்,  வருவாய் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News