திருவண்ணாமலையில் கைத்தறி ஆடை கண்காட்சி: அமைச்சர் தொடங்கி வைத்தார்

திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் கைத்தறி ஆடை கண்காட்சியை அமைச்சர் வேலு தொடங்கி வைத்தார்

Update: 2021-10-02 11:20 GMT

கைத்தறி கண்காட்சியை பார்வையிடும் அமைச்சர் வேலு 

மகாத்மா காந்தி அவர்களின் 153 பிறந்த நாளை முன்னிட்டு, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகாத்மா காந்தி அவர்களின் திருவுருவப் படத்திற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மலர் தூவி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு  கைத்தறி நெசவுத்தொழில் முன்னேற  கைத்தறி ஆடைகளின் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார்.  நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ்  , மாவட்ட வருவாய் அலுவலர், செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர், அரசு அலுவலர்கள்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News