திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மருத்துவ மையம் திறப்பு
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் வளாகத்தில் மருத்துவ மையம் திறக்கப்பட்டது.
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மருத்துவ மையங்களை காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான கட்டிடத்தில் மருத்துவ மையத்தை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை துணைத்தலைவர் பிச்சாண்டி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி, கோயில் இணை ஆணையர் அசோக்குமார், அருணை மருத்துவக்கல்லூரி துணைத் தலைவர் மருத்துவர் எ. வ. வே. கம்பன், முன்னாள் நகரமன்ற தலைவர் ஸ்ரீதரன், நகர கழக செயலாளர் கார்த்திக் வேல்மாறன் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.