திருவண்ணாமலையில் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ முகாம்

திருவண்ணாமலை தியாகி அண்ணாமலை பிள்ளை அரசு பள்ளியில் அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது.

Update: 2022-08-27 07:03 GMT

தியாகி அண்ணாமலை பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மருத்துவ முகாம்.

திருவண்ணாமலை தியாகி அண்ணாமலை பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளியில் அருணை மருத்துவ கல்லூரி மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயக்குமாரி தலைமை தாங்கினார். மருத்துவர்கள் பாரதி, பரணிதரன், இந்துமதி,  சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர் . பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சண்முகம் வரவேற்று பேசினார்.

பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஆறுமுகம், மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில் இந்த முகாமில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஏழை எளிய மாணவர்களுக்கு இந்த இலவச மருத்துவ முகாம் பயனுள்ளதாக உள்ளது.

இந்த முகாமினை ஒரு சேவையாக தொடர்ந்து இந்த மாவட்டம் முழுவதும் நடத்தி வரும் அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை குழுவினர்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட மக்களின் சார்பாகவும், இப்பள்ளியின் பெற்றோர்கள் சார்பாகவும் நன்றியையும் பாராட்டும் தெரிவித்துக் கொள்கிறோம்  எனக் கூறினார்.

நிகழ்ச்சியில்  பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர் பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர்கள்,  பள்ளி முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள், மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News