திருவண்ணாமலையில் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பிறந்தநாள் விழா
திருவண்ணாமலை தமிழ் சங்கம் சார்பில் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது
திருவண்ணாமலை மாவட்ட தமிழ்ச்சங்கம் சார்பில் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அவர்களின் 140 வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. .
இவ்விழாவில் தமிழக சட்டசபை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி மகாகவியின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் அருணை மருத்துவக்கல்லூரி துணைத் தலைவர் மருத்துவர் எ. வ. வே. கம்பன், மாவட்ட தமிழ்ச் சங்கத் தலைவர் இந்திர ராஜன், மாவட்ட தமிழ்ச்சங்க செயலாளரும் கெங்குசாமி நாயுடு மேல்நிலைப் பள்ளித் தாளாளர் சின்ராஜ், முன்னாள் நகரமன்ற தலைவர் ஸ்ரீதரன், நகர செயலாளர் கார்த்திக் வேல்மாறன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.