கூகுள் மேப்பை பார்த்துக் கொண்டே சாலையை பார்க்காத டிரைவர்
திருவண்ணமலையில் கூகுள் மேப்பை பார்த்து கொண்டே வண்டி ஓட்டிய டிரைவர், லாரியை சிக்னல் மீது மோதி விபத்து ஏற்படுத்தினார்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் மூர்த்தி. இவர் வேலூரில் இருந்து மணலூர்பேட்டைக்கு லாரியில் சமையல் எண்ணெய் ஏற்றிக் கொண்டு சென்றுகொண்டிருந்தார்.
அப்போது திருவண்ணாமலை பெரியார் சாலை வழியாக லாரியை இயக்கிய மூர்த்தி எந்த வழி செல்ல வேண்டும் என குழப்பத்தில் கூகுள் மேப்பை பயன்படுத்திக்கொண்டு சாலை நடுவிலுள்ள சிக்னலில் மோதினார். இதில் சாலையில் உள்ள சிக்னல் சேதமடைந்ததுடன் கீழே விழுந்தது.
லாரியின் முன்புறம் ஒரு பக்கம் முழுமையாக சேதமடைந்தது. இதில்அதிர்ஷ்டவசமாக லாரி ஓட்டுநர் மூர்த்தி உயிர் தப்பினார். தகவலறிந்து வந்த போக்குவரத்து காவல்துறையினர் விபத்து குறித்து லாரி ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இந்தப் பகுதியில் அதிக மக்கள் நடமாட்டம் மற்றும் வாகன செல்வது வழக்கம், சாலை விபத்து நடந்த நேரத்தில் யாருக்கும் எந்த ஒரு அசம்பாவிதம் நடைபெறவில்லை.