லாரி - இருசக்கர வாகனம் மோதி விபத்து,ஒருவர் பலி

Update: 2021-01-06 05:15 GMT

செங்கம் அருகே டேங்கர் லாரியும் இருசக்கர வாகனமும் மோதிய விபத்தில் ஒருவர் பலியானார். இருவர் படுகாயம் அடைந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த மோத்தக்கல் பகுதியைச் சேர்ந்த ராமராஜன், திருப்பதி, வேலு ஆகிய மூவரும் இருசக்கர வாகனத்தில் மேல்ரவந்தவாடி அருகே உறவினரின் இறுதிச்சடங்கை முடித்து விட்டு தங்களது சொந்த ஊரான மோத்தகல் பகுதிக்கு சென்று சென்று கொண்டிருந்த போது அத்திப்பாடி அருகே கொச்சினில் இருந்து சென்னைக்கு ரசாயன திரவம் ஏற்றி வந்த டேங்கர் லாரியும் இவர்கள் சென்ற இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ராமராஜன் என்பவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த திருப்பதி மற்றும் வேலு ஆகியோரை மீட்டு செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை செய்யப்பட்டு திருவண்ணாமலை அரசுமருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிறகு விபத்து ஏற்படுத்திய டேங்கர் லாரி ஓட்டுநர் சரவணன் என்பவர் செங்கம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். இந்த விபத்து குறித்து மேல்செங்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: