கலசப்பாக்கம் அருகே புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை துவக்கம்
கலசப்பாக்கம் தொகுதிக்கு உள்பட்ட அடிவாரம் கிராமத்துக்கு திருவண்ணாமலையில் இருந்து பேருந்து தொடக்கம்.
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொகுதிக்கு உள்பட்ட அடிவாரம் கிராமத்துக்கு திருவண்ணாமலையில் இருந்து தினசரி காலை, மாலை என நாள் ஒன்றுக்கு இரண்டு முறை சென்றுவர அரசுப் பேருந்து இயக்கப்படவுள்ளது.
புதிய பேருந்து வழித்தடம் தொடக்க விழா நிகழ்ச்சி அடிவாரம் கிராமத்தில் நடைபெற்றது. திருவண்ணாமலை தொகுதி மக்களவை உறுப்பினா் சி.என்.அண்ணாதுரை கலந்து கொண்டு கொடியசைத்து பேருந்தை தொடங்கி வைத்தார் நிகழ்ச்சியில் கலசப்பாக்கம் எம்எல்ஏ சரவணன், ஒன்றிய செயலாளர்கள், தொ.மு.ச உறுப்பினர்கள், மாவட்ட கவுன்சிலர்கள், போக்குவரத்துதுறை அதிகாரிகள் உள்ளிட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.