பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற கூலி தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற கூலி தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை கோர்ட்டு தீர்ப்பளித்தது.

Update: 2022-12-21 06:34 GMT

திருவண்ணாமலை நீதிமன்றம் (கோப்பு படம்).

சிறுமியை கடத்தில் பாலியல் பலாத்காரம் செய்ய இளைஞருக்கு பத்தாண்டு சிறைத்தண்டனை விதித்து திருவண்ணாமலை கோர்ட்டு தீர்ப்பளித்தது.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா முடையூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (வயது 37), கூலி தொழிலாளி. இவர் கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 31-ந் தேதி  அதே பகுதியை சேர்ந்த ஒரு 16 வயதுடைய சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று உள்ளார்.

அப்போது சிறுமியின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்தனர். இதைகண்ட ராஜா சிறுமியை அங்கேயே விட்டு, விட்டு தப்பியோடி விட்டார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போளூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்தனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. ராஜா மீது போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.இதில் அரசு தரப்பில் வழக்கறிஞர் மைதிலி ஆஜரானார். சாட்சிகள் வாக்கு மூலம், குறுக்கு விசாரணை வழக்கறிஞர்கள் விவாதத்திற்கு பின்னர் வழக்கு இறுதி நிலையை எட்டியது.

இந்த நிலையில் இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி நேற்று தீர்ப்பு கூறினார். அதில் சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற ராஜாவிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்தார். இதையடுத்து ராஜாவை போலீசார் உடனடியாக பாதுகாப்புடன் அழைத்து சென்று  வேலூர் மத்திய சிறைக்கு கொண்டு போய் அடைத்தனர்.

Tags:    

Similar News