இந்த ஆண்டு ஜமாபந்தி மனுக்கள் ஆன்லைன் மூலம்
இந்த ஆண்டிற்கான ஜமாபந்தி மனுக்கள் ஆன்லைன் மூலம் மட்டமே அனுப்பப்படவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் வருவாய்த் துறையினரால் நடத்தப்பட்டுவரும் ஜமாபந்தி, இந்த ஆண்டு 21 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற உள்ளது.
கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக, பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை இந்த ஆண்டு ஆன்லைன் மூலம் tn.gov.in/jamabandhi இணையதள முகவரி மூலம் அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது