ரமணாஸ்ரமத்தில் பக்தி பாடல் பாடிய இசைஞானி இளையராஜா
ரமணாஸ்ரமத்தில் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷியின் 72-வது ஆராதனை நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பங்கேற்று கீர்த்தனைகளை பாடி வழிபட்டார்
திருவண்ணாமலை ரமணர் ஆஸ்ரமத்தில், நேற்று, 72வது மஹா ஆராதனை விழா நடைபெற்றது.
பல வண்ண மலர்களால் அலங்கரித்த பகவான் ரமணரின் சன்னதியில், அதிகாலையில் மங்கல இசையுடன் விழா துவங்கியது. பின்னர் மஹன்யாச ருத்ர ஜபம், சிறப்பு பாராயணம், அபிஷேக அலங்காரங்கள் நடந்தன.
தொடர்ந்து நேற்று மாலை இசையமைப்பாளர் இளையராஜா பங்கேற்று, ரமணரின் கீர்த்தனைகளை பாடி வழிபட்டார். மேலும், இளையராஜாவின் மகனும் இசை அமைப்பாளருமான கார்த்திக் ராஜா உள்ளிட்ட பலர், நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
ஏராளமான பக்தர்கள் இளையராஜாவின் பக்தி பாடல்களை கேட்டு ரசித்தனர்.