அருணாசலேஸ்வரர் கோவிலில் ரூ.1.23 கோடி உண்டியல் காணிக்கை
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ரூ. 1.23 கோடி, பக்தா்கள் உண்டியல் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தா்கள் வந்து செல்கின்றனா். நேற்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் அஷ்டலிங்க கோவில்களில் உள்ள உண்டியல்கள் அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டன.
அவை, கோவில் இணை ஆணையர் அசோக்குமார் முன்னிலையில் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. காலை முதல், இரவு 9 மணி வரை காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில், ரூ.1.23 கோடி ரொக்கம், 552 கிராம் தங்கம், 740 கிராம் வெள்ளியும் உண்டியல் காணிக்கையாக பெறப்பட்டது.