திருவண்ணாமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை: விவசாயிகள் மகிழ்ச்சி
திருவண்ணாமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடா்ந்து இடியுடன் பெய்து வரும் மழையால் மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி.
திருவண்ணாமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடா்ந்து இடியுடன் பெய்து வரும் மழையால் மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். போளூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு முதல் பெய்த மழையின் அளவு 9.76 செ மீ மழை பதிவாகியுள்ளது.