பேருந்து நிலையத்தில் தவற விட்ட பணத்தை உடனடியாக மீட்டு தந்த காவலர்
திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் தவற விட்ட பணத்தை உடனடியாக மீட்டு தந்த காவலரை அழைத்து மாவட்ட கண்காணிப்பாளர் பாராட்டினார்
திருவண்ணாமலை, மாவட்டம் கெங்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சுதாகர் என்பவர் சென்னை செல்வதற்காக திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்திற்கு வந்திருந்தார். அப்போது பேருந்தில் ரூபாய் 134000/- பணத்துடன் கூடிய பையை தொலைத்து விட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பேருந்து நிலைய புற காவல் நிலையத்தில் பணியிலிருந்த முதல் நிலை காவலர் ராஜசேகரன் என்பவர் துரிதமாக செயல்பட்டு தொலைந்து போன பணப்பையை மீட்டு, திருவண்ணாமலை நகர உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் கிரன் சுருதி, அவர்களின் முன்னிலையில் 134000/- ரூபாயை உரியவரிடம் ஒப்படைத்தார்.
இச்செயலை திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் வெகுவாக பாராட்டினார்.