திருவண்ணாமலையில் அரசு ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

திருவண்ணாமலையில் அரசு ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளிப்பொருட்கள், தங்க நகைகளை மர்ம நபர்களை திருடிச்சென்றனர்.

Update: 2021-11-04 12:39 GMT

திருவண்ணாமலையில் அரசு ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளிப்பொருட்கள், தங்க நகைகளை மர்ம நபர்களை திருடிச்சென்றனர். 

திருவண்ணாமலை வேங்கிக்கால் தென்றல் நகர் பகுதியை சேர்ந்தவர் அனுராதா (வயது 46), திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவர், கடந்த 29-ந்தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு திருச்சியில் உள்ள தனது மகளையும், மருமகனையும் அழைத்துவரச் சென்றிருந்தார். பின்னர் அவர்களை அழைத்துக்கொண்டு இரவு  திருவண்ணாமலைக்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 1½ கிலோ வெள்ளிப்பொருட்கள், 11½ பவுன் நகை ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அனுராதா திருவண்ணாமலை கிழக்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News