அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

நேற்று விடுமுறை மற்றும் பௌர்ணமிக்கு வர இயலாத பக்தர்கள் குவிந்ததால், அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

Update: 2022-02-20 14:10 GMT

அண்ணாமலையார் கோவிலில் தரிசனத்திற்கு காத்திருக்கும் பக்தர்கள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நேற்று விடுமுறை தினம் என்பதால், இன்று அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

மேலும் கடந்த 15-ந் தேதி இரவு முதல் 16-ந் தேதி இரவு வரை பவுர்ணமி இருந்தது. பவுர்ணமிக்கு திருவண்ணாமலைக்கு வர முடியாத பக்தர்கள் இன்று அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வந்தனர். இதனால் கூட்டம் அதிகரித்ததால் பக்தர்கள் கோவிலில் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்ததாக வெளியே வந்த பக்தர்கள் கூறினர். மேலும் பக்தர்கள் பலர் தனித்தனியாக கிரிவலமும் சென்றனர். மாட வீதிகளில்  மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

Tags:    

Similar News