திருவண்ணாமலை: சிறப்பு ரயில்கள் இயக்கப்படாததால் பக்தர்கள் அவதி

திருவண்ணாமலைக்கு கிரிவலம் வந்த பக்தர்கள், சிறப்பு ரயில்கள் இயக்கப்படாததால், 5 மணி நேரம் காத்திருந்தனர்

Update: 2022-04-17 08:06 GMT

திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் காத்திருந்த பக்தர்கள்

திருவண்ணாமலை சித்ரா பௌர்ணமிக்கு கிரிவலம் வந்த பக்தர்கள், கிரிவலம் முடித்து ஊர் திரும்புவதற்காக ரயில் நிலையம் வந்தனர். ஏற்கனவே அறிவித்தபடி சிறப்பு ரயில்கள் இயக்கப்படாததால், பல மணிநேரம் ரயில் நிலையத்தில் காத்துக் கிடந்தனர்.

திருவண்ணாமலைக்கு வரும் பேருந்துகள் ஊருக்கு வெளியே தற்காலிக பேருந்து நிலையங்களில் நிறுத்தப்பட்டன. அவை அதிக தூரத்தில் அமைக்கப்பட்டதால், நடந்து செல்ல முடியாத பக்தர்கள் ரயில் நிலையத்திற்கு வந்தனர்.

சிறப்பு ரயில் சேவையும் இயக்கப்படாததால், சுமார் ஐந்து மணி நேரம் காத்திருந்து ரயிலில் நெரிசலில் பயணம் செய்தனர்

Tags:    

Similar News