அண்ணாமலையார் கோயில் உண்டியலில் பக்தர்கள் காணிக்கை 1 கோடி 50 லட்சம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டதில், 1 கோடி 52 லட்சம் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தி இருந்தனர்

Update: 2022-08-31 00:32 GMT

அண்ணாமலையார் கோவில் உண்டியல் எண்ணும் பணி 

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கையை மாதந்தோறும் கோயில் நிர்வாகம் எண்ணுவது வழக்கம்.

இந்நிலையில், அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்க கோவில்களில் உள்ள உண்டியல்கள் அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டு கோவில் இணை ஆணையர் அசோக்குமார் முன்னிலையில் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது.

இதில் ரூ.1 கோடியே 52 லட்சத்து 22 ஆயிரத்து 946-ம், 472 கிராம் தங்கமும், 739 கிராம் வெள்ளியும் உண்டியல் காணிக்கையாக பெறப்பட்டது.

Tags:    

Similar News