திருவண்ணாமலை மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் ஆய்வு கூட்டம்
திருவண்ணாமலையில் வளர்ச்சி திட்டப் பணிகள் ஆய்வு கூட்டம் கலெக்டர் பா.முருகேஷ், தலைமையில் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், கலெக்டர் பா.முருகேஷ், தலைமையில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து அனைத்துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மு.பிரதாப், மாவட்ட வன அலுவலர் அருண்லால், திட்ட இயக்குநர், மகளிர் திட்டம் சையத் சுலைமான், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) எஸ். கணேஷ், உதவியாளர் (நிலம்) கிருஷ்ணமூர்த்தி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.