திருவண்ணாமலையில் கல்குவாரி குட்டையில் ஆண் சடலம் மீட்பு

திருவண்ணாமலையில் கல்குவாரி குட்டையில் ஆண் சடலத்தை மீட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2022-04-18 05:45 GMT

திருவண்ணாமலை அடி அண்ணாமலையில்,  கல்குவாரி குட்டை உள்ளது. இன்று காலை இந்த குட்டையில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் அழுகிய நிலையில் மிதந்துள்ளது. இதை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக திருவண்ணாமலை தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குட்டையில் மிதந்து கொண்டிருந்த ஆண் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் குட்டையில் மூழ்கி இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், அவர் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News