மின்வேலி அமைப்பது கிரிமினல் குற்றம்: மேற்பார்வை பொறியாளர் எச்சரிக்கை

விவசாய நிலத்தில் மின் வேலி அமைத்தால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என மின்பகிர்மான மேற்பார்வை பொறியாளர் எச்சரிக்கை

Update: 2021-07-17 08:23 GMT

திருவண்ணாமலை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் பூ.காளிமுத்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- அறுந்து கிடக்கும் மின்கம்பிகள், சாய்ந்த மின் கம்பங்கள், உடைந்த மின்கம்பங்கள் பற்றிய விவரங்கள் மற்றும் சேதமடைந்து வெளியே தெரியும் புதை வட கம்பிகள், தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை பார்த்தால் அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு நேரிலோ, தொலைபேசி மூலமாகவோ தெரிவிக்க வேண்டும்.

திருவண்ணாமலை பகிர்மான வட்ட அலுவலகத்தில் செயல்பட்டு வரும் சேவை மையத்தினை 04175-255325 என்ற தொலைபேசி எண்ணிலும், 9445855768 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் தெரிவிக்கலாம்.

மழை காலங்களில் மின்மாற்றிகள், மின்கம்பங்கள், மின்பகிர்வுப் பெட்டிகள், ஸ்டே வயர்கள் ஆகியவற்றின் அருகே செல்ல வேண்டாம். விவசாயிகள் தங்கள் நிலத்தில் பயிர்களை பாதுகாக்க மின்வேலி அமைப்பதன் மூலம் அப்பாவி மக்கள் மின் விபத்துக்கு உள்ளாகின்றனர். விவசாய நிலத்தில் மின் வேலி அமைப்பது கிரிமினல் குற்றம். மீறும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் ஏற்படும் மின் தடை மற்றும் மின்சார பொருட்கள் சேதாரம் போன்ற புகார்களை தங்கள் பகுதிக்கு உட்பட்ட பிரிவு அலுவலர் மற்றும் உதவி செயற் பொறியாளர்களை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News