திருவண்ணமலையில் அனைந்திந்திய கூட்டுறவு வார விழா
திருவண்ணாமலையில் நடைபெற்ற கூட்டுறவு வார விழாவினை பேரவை துணைத்தலைவர் பிச்சாண்டி துவக்கி வைத்தார்
68-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா -2021 முன்னிட்டு இன்று திருவண்ணாமலையில் நடைபெற்ற 'கூட்டுறவுகளின் மூலம் வளமாக்குதல்' மாவட்ட அளவிலான விழாவை பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
விழாவில், மாவட்ட அளவிலான கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்கள் , அரசு நலத்திட்ட உதவிகள், பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் ஆகியவற்றை வழங்கினார்
இவ்விழாவில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன், மாவட்ட கவுன்சிலர் ஆறுமுகம், கூட்டுறவு சங்க மண்டல இணைப்பதிவாளர், மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் இயக்குனர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.