திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலத்திற்கு இந்த மாதமும் தடை

திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலத்திற்கு பக்தர்கள், பொதுமக்கள் வர வேண்டாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்

Update: 2021-12-16 14:19 GMT

அண்ணாமலையார் கோவில் 

திருவண்ணமலையில்  ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நாட்களில் கிரிவலம் வருவதற்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், மாநிலங்களிலிருந்தும் இலட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வருகை புரிவார்கள்.

கொரோனா பரவல் கட்டுப்படுத்த தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால், திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் நடைபெறும் நாட்களான 18.12.21 முதல் 19.12.21 வரை திருவண்ணாமலையில்   கிரிவலம் வருவதற்கு அனுமதி கிடையாது ,

கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவல் கட்டுப்படுத்தவும், பொதுமக்களை பாதுகாக்கவும் எடுக்கப்பட்டுள்ள மேற்கண்ட நடவடிக்கைக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ், வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

Tags:    

Similar News