திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சிப் பணிகளை ஆட்சியர் முருகேஷ் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடந்து வரும் ஊரக வளர்ச்சி பணிகளை கலெக்டர் முருகேஷ் ஆய்வு செய்தார்.

Update: 2022-03-02 13:38 GMT

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை ஆட்சியர் முருகேஷ் ஆய்வு மேற்கொண்டார்.

திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக்கால் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் தேசிய கிராம சுயாட்சி திட்டத்தின் கீழ் ரூ. 23.57 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டுமான பணியினை  மாவட்ட ஆட்சித்தலைவர்  முருகேஷ்,  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆடையூர் ஏரியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ரூ. 9.07 லட்சம் மதிப்பீட்டில் உறிஞ்சிக் குட்டை அமைக்கும் பணியினை ஆய்வு செய்தார்.

மேலதிக்கான் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 1.83 லட்சம் மதிப்பீட்டில் கட்டப் பட்டு வரும் நூலகக் கட்டடம் மற்றும் சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்தார்.

உடையான் நந்தல்  ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ரூபாய் 7 லட்சம் மதிப்பீட்டில் பெருமளவு மரக்கன்றுகள் நடும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் வெற்றிவேல் ,உதவி திட்ட அலுவலர் ,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ,மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News