சர்வதேச முதியோர் தின விழா: முதியோர்களிடம் கலந்துரையாடிய கலெக்டர்

சர்வதேச முதியோர் தின விழாவில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் முதியோர்களிடம் கலந்துரையாடினார்.

Update: 2021-10-01 14:47 GMT

முதியோர்களிடம் கலந்துரையாடிய கலெக்டர் முருகேஷ்

திருவண்ணாமலை கிரேஸ் முதியோர் இல்லத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை மூலம் 1.10.2021 அன்று நடைபெற்ற சர்வதேச முதியோர் தின விழாவில்  மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ்  கலந்து கொண்டார் . 

அப்போது முதியோர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் கலந்துரையாடினார். பின்பு முதியோர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் கந்தன், மாவட்ட வருவாய் அலுவலர்,  செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர்  மற்றும்  சமூக நலத்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர் .

Tags:    

Similar News