தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு: கலெக்டர் துவக்கி வைத்தார்
திருவண்ணமலையில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பை கலெக்டர் முருகேஷ் துவக்கி வைத்தார்
திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் உள்ளாட்சி தேர்தல்-2021 தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ் தலைமையில் இன்று நடைபெற்றது.
இப்பயிற்சி வகுப்பில் கூடுதல் ஆட்சியர் பிரதாப் ,உதவி ஆட்சியர் கட்டா ரவி தேஜா, துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.