திருவண்ணாமலை உழவர் சந்தை நுழைவுவாயில் சுத்தம் செய்யும் பணி
இன்ஸ்டாநியூஸ் செய்தி எதிரொலி: திருவண்ணாமலை உழவர் சந்தை நுழைவுவாயில் சுத்தம் செய்யும் பணி துவங்கியது
திருவண்ணாமலை உழவர் சந்தை நுழைவு வாயில் கழிவு நீர் கலந்து மாசுபட்டு இருப்பதை புகைப்படத்துடன் செப்டம்பர் 11 ஆம் தேதி நமது Instanews தளத்தில் வெளியிட்டிருந்தோம். இன்று நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஆல்பர்ட் அதன் மீது நடவடிக்கை மேற்கொண்டார்.
மேற்படி இடத்தை உடனடியாக சுத்தம் செய்த மாவட்ட நிர்வாகத்திற்கும், நகராட்சி நிர்வாகத்திற்கும், சுகாதார ஆய்வாளர் ஆல்பர்ட் அவர்களுக்கும், துப்புரவு தொழிலாளர்களுக்கும் நமது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.