நான்கு மாநிலங்களில் பாஜக வெற்றி: திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்தில் கொண்டாட்டம்

நான்கு மாநிலங்களில் பாஜக வெற்றியை திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குரைஞர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்

Update: 2022-03-10 13:26 GMT

மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைத்தலைவர் கிஷோர் குமார் மற்றும் வழக்கறிஞர்கள் இனிப்புகள் வழங்கி பாரதிய ஜனதாவின் வெற்றியை கொண்டாடினர்.

இன்று நான்கு மாநிலங்களில் பாஜக வெற்றியை  திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்தில் பாஜக வழக்கறிஞர்கள் இனிப்பு வழங்கி  கொண்டாட்டம்.

உத்தரப்பிரதேசம்,  உத்தரகாண்ட், கோவா,  மணிப்பூர், பஞ்சாப்   ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல் முடிவுகள் இன்று எண்ணப்பட்டு  உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர், ஆகிய நான்கு மாநிலங்களில் பாரதிய ஜனதா வெற்றி பெற்றுள்ளது.திருவண்ணாமலை மாவட்ட வழக்கறிஞர்கள் பிரிவு சார்பாக பாஜக வெற்றியினை நீதிமன்றத்திற்கு வந்திருந்த பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.நிகழ்ச்சியில் மூத்த வழக்கறிஞர் ராமகிருஷ்ணன் தலைமையில் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைத்தலைவர் கிஷோர் குமார் மற்றும் வழக்கறிஞர்கள் நான்கு மாநிலங்களில்    பாரதிய ஜனதா கட்சி பெற்ற  வெற்றியை இனிப்புகள் வழங்கி  கொண்டாடினர்.


Tags:    

Similar News