கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு : ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம்

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு கூட்டம் தலைவர் கலைவாணி தலைமையில் நடைபெற்றது.

Update: 2021-08-26 04:47 GMT

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த ஒன்றிய குழு கூட்டம். 

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய குழு தலைவர் கலைவாணி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ராமன் மற்றும் பிடிஒக்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:-

தமிழக முதல்வராக பொறுப்பேற்ற 100 நாட்களில் மக்களின் நலன் காக்கும் எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி உள்ள முதல்வர் அவர்களுக்கும், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் அவர்களுக்கும் துணை சபாநாயகர் ஆகியோருக்கும்   பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தல்,

திருவண்ணாமலை ஒன்றியத்தில் 15வது நிதிக்குழு மானியத்தில் 69 கிராம ஊராட்சிகளிலும் தேவையான அத்தியாவசிய பணிகளை நிறைவேற்றல்,

கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழுமையாக ஒத்துழைப்பு அளித்து பணியாற்றுதல்,

திருவண்ணாமலை ஒன்றியத்தில் உள்ள 69 கிராம ஊராட்சிகளிலும் 100 சதவீத கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்துதல்,

மழைநீர் சேமிப்பு மற்றும் நிலத்தடி நீர் உயர தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பண்ணைக் குட்டைகள் அமைக்கும் பணியை முழுமையாக நிறைவேற்றுதல் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News