திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் 75,579 பேருக்கு தடுப்பூசி

திருவண்ணாமலை மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தி கொண்டோரின் எண்ணிக்கை 65 சதவீதமாக உயர்ந்துள்ளது

Update: 2021-11-15 06:56 GMT

தடுப்பூசி சிறப்பு முகாமில் கலெக்டர் முருகேஷ்

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,  தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் இரண்டாவது அலையின் தீவிரம் படிப்படியாக குறைந்து வருகிறது. தொற்றிலிருந்து பாதுகாக்க இரண்டு தவணை தடுப்பூசி செலுத்துவது மட்டுமே தற்போதுள்ள தீர்வாக உள்ளது.

தற்போது, தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.  பெரும்பாலான முகாம்களில் பொதுமக்கள் ஆர்வத்துடன் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர் . இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் 1074 இடங்களில் நேற்று நடைபெற்ற சிறப்பு  முகாம்களில் 75,579 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.  அதன் மூலம் தடுப்பூசி செலுத்தி கொண்டோரின் எண்ணிக்கை 65 சதவீதமாக உயர்ந்துள்ளது என தெரிவித்தார். 

Tags:    

Similar News