திருவண்ணாமலைக்கு ரயில் மூலம் 2,660 மெட்ரிக் டன் யூரியா வருகை

திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளின் தேவைக்காக 2,660 மெட்ரிக் டன் யூரியா ரயில் மூலம் வந்தடைந்தது.

Update: 2022-03-04 02:04 GMT

திருவண்ணாமலைக்கு ரயில் மூலம் வந்தடைந்த யூரியா மூட்டைகள்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பயிரிட்டுள்ள வேளாண் பயிர்களுக்குத் தேவையான உரம் மற்றும் யூரியா தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க வேளாண்மை துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி  காரைக்கால் துறைமுகத்திலிருந்து  நடப்பு பருவத்துக்கு தேவையான  2660 மெட்ரிக் டன் யூரியா  சரக்கு ரயில் மூலம் திருவண்ணாமலைக்கு வந்தடைந்தது.

பின்னர் அந்த யூரியா முட்டைகள் மாவட்டத்தில் உள்ள  கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் விற்பனை மையங்களுக்கு வேளாண் இணை இயக்குனர்  மேற்பார்வையில் சரக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. 

இதைத் தவிர தனியார் உர விற்பனை நிலையங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கத்தில் 3,037 மெட்ரிக் டன் யூரியா, 880 மெட்ரிக் தொன் டி ஏ பி, 802 மெட்ரிக் டன் பொட்டாஷ், 4,470 தமிழ் காம்ப்ளக்ஸ் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் ஆதார் எண்ணுடன்  சென்று மன வள அட்டை பரிந்துரையின்படி பயிருக்குத் தேவையான உரங்களை பிஓஎஸ் இயந்திரம் மூலம் ரசீது பெற்று பயன்பெறலாம் என்று வேளாண்மைத் துறை இயக்குனர் அறிவித்துள்ளார்.

Tags:    

Similar News