திருவண்ணாமலை தொகுதியில் சுயேட்சை வேட்பாளர்கள் மனுதாக்கல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கிய முதல் நாளில் திருவண்ணாமலை தொகுதியில் 2 சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

Update: 2021-03-12 17:45 GMT

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது அதை ஒட்டி வேட்புமனுத்தாக்கல் தொடங்கியது வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய வரும் 19ஆம் தேதி கடைசி நாள்.  சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகள் விடுமுறை நாட்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. வேட்பு மனு தாக்கலின் முதல் நாளில்  சுயேட்சை வேட்பாளர்கள் 2 பேர் இன்று வேட்பு மனுதாக்கல் செய்தனர் .

வேட்புமனுத்தாக்கல் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது . வேட்புமனு தாக்கலின்போது வேட்பாளருடன் இரண்டு நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

Tags:    

Similar News