வினாத்தாள் கசிவு விவகாரம்: அதிகாரி பணியிடை நீக்கம்

10 மற்றும் 12 ம் வகுப்பு வினாத்தாள் வெளியான விவகாரத்தில் திருவண்ணாமலை முதன்மை கல்வி அலுவலர் அருள்செல்வம் பணியிடை நீக்கம்

Update: 2022-02-15 07:18 GMT

திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் வெளியான விவகாரத்தில் திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்செல்வம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

தேர்வு முறைகேடுகளை தடுக்க தவறியதால் பள்ளிக்கல்வித்துறை அவர் மீது  நடவடிக்கை எடுத்துள்ளது.

10,12ம் வகுப்பு திருப்புதல் தேர்வுக்கான வினாத்தாள்கள் வெளியானதால் சர்ச்சை ஏற்பட்டது. திருவண்ணாமலையில் உள்ள 2 தனியார் பள்ளிகளில் இருந்து வினாத்தாள்கள் கசிந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

அருள்செல்வம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு  பொறுப்பு அலுவலராக விழுப்புரம் CEO கிருஷ்ணபிரியா நியமிக்கப்பட்டுள்ளார்

Tags:    

Similar News