திருவள்ளூர் அருகே இளைஞர் படுகொலை: போலீசார் விசாரணை

Crime News in Tamil - மூன்று பேர் கொண்ட கும்பல் ராபின் வந்த இருசக்கர வாகனத்தை கீழே தள்ளி அவரை சரமாரியாக வெட்டியுள்ளனர்.

Update: 2022-09-01 02:30 GMT

கொலை செய்யப்பட்ட ராபின்.

Crime News in Tamil -ஊத்துக்கோட்டை அடுத்த அம்பேத்கர் நகர் பகுதியில் வசித்து வரும் ஜார்ஜ் என்பவர் மகன் ராபின் (23). இவர் தனது நண்பர்களுடன் ஊத்துக்கோட்டை பஜார் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நண்பர் ஒருவரின் திருமணத்திற்காக சென்றுள்ளார்.

பின்னர் திருமணம் முடிந்து வீட்டிற்கு அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த கமல் என்பவர் உடன் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது,  அவரை பின்தொடர்ந்து வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் ராபின் வந்த இருசக்கர வாகனத்தை கீழே தள்ளி அவரை சரமாரியாக வெட்டியுள்ளனர். நிலைகுலைந்த ராபின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சம்பவ இடத்திற்கு சென்ற ஊத்துக்கோட்டை காவல் துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, ராபின் உடன் சென்ற கமல் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திருமணத்திற்கு சென்ற நண்பர்கள் யார் அவர்களின் விவரங்களை விசாரணை நடத்தி  வருகின்றார்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News