பெரியபாளையம் அருகே கஞ்சா விற்பனை செய்த இரண்டு இளைஞர்கள் கைது

பெரியபாளையம் அருகே கஞ்சா விற்பனை செய்த இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Update: 2022-08-12 07:06 GMT

பெரிய பாளையம் அருகே கஞ்சா விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்ட இருவர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளருக்கு வந்த ரகசிய தகவலின் பெயரில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர சோதனைகளில் தனிப்பிரிவு போலீசார் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் பெரியபாளையம் அடுத்த மஞ்சங்கரணை ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டை குப்பம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக வந்த தகவல் அடிப்படையில் அப்பகுதியில் தனிப்பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது பெரியபாளையம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த சுனில்(20) ஆமிதாநல்லூர் அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த பிரவீன் வயது (22) ஆகியோர் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த சுமார் 250 கிராம் கஞ்சாவை தனிப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்து இரண்டு பேரையும் பெரியபாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர்  இது குறித்து பெரியபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் .

Tags:    

Similar News