திருவள்ளூர் பள்ளி வாகனங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு..!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் ஆய்வு செய்தார்.

Update: 2024-05-27 03:15 GMT

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளின் வாகனங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபு சங்கர் ஆய்வு செய்தார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி வாகனங்களில் குறைபாடுகள் இருந்தால் பள்ளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் வாகன ஓட்டுநர்கள் மற்றும் பள்ளி அலுவலர்களுடன் பல்வேறு கலந்துரையாடல் நடத்தி பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.


பின்னர் பேசிய அவர், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி வாகனங்களில் குறைபாடுகள் இருந்தால் பள்ளி நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பின்னர் திருவள்ளூர் மாவட்ட தீயணைப்பு துறை சார்பில் வாகன ஓட்டுனர்களுக்கு தீத்தடுப்பு குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் தீ விபத்தின் போது கடை பிடிக்க வேண்டிய பாதுகாப்பு குறித்து, ஓட்டுனர்களுக்கு விளக்கம் அளித்தனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் ஆகியோர் 41 தனியார் பள்ளியில் இயங்கி வரும் சுமார் 189 வாகனங்களை ஆய்வு செய்தனர்.


இந்த ஆய்வில் வாகனங்களின் பிரேக், முகப்பு விளக்கு, அவசரகால வழி, கண்காணிப்பு கேமரா, வேக கட்டுபாட்டு கருவிகள் குறித்து ஆய்வு செய்யபட்டது. இதில், சில குறைபாடுகள் கண்டறியப்பட்டு 5 வாகனங்களுக்கு தகுதிச்சான்று தற்காலிகமாக ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் உத்தரவிட்டுள்ளார். இந்த ஆய்வின் போது திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் கற்பகம், வட்டார போக்குவரத்து அலுவலர் இளம்முருகன், (பொறுப்பு) வட்டார போக்குவரத்து ஆய்வாளர் மோகன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News