ஆந்திர மாநிலத்தில் இருந்து பேருந்தில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த வாலிபர் கைது!

ஆந்திர மாநிலத்தில் இருந்து பேருந்தில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-06-12 12:13 GMT

ஆந்திரா மாநிலம் மதுபானங்கள் அதிக அளவில் திருவள்ளூர் மாவட்டத்திற்கு கடத்தப்பட்டு வருவதாக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் பென்னலூர்பேட்டை காவல் எல்லைக்குட்பட்ட அல்லிகுழி கிராமத்தில் இருந்து திருவள்ளூர் வழியாக ஸ்ரீபெரும்புதூர் நோக்கி தனியார் நிறுவனத்திற்கு சென்றுகொண்டிருந்த பேருந்துகளை திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு துரை பாண்டியன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு தனியார் நிறுவன பேருந்தை சோதனை செய்தபோது, அதில் 9 ஆந்திர மாநில மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதை கண்டறிந்து அவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் ஊத்துக்கோட்டை அல்லிகுழி வெங்கடேஸ்வர பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த முனுசாமி (26) என்பவரை திருவள்ளூர் டவுன் போலீசார் நேற்று கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News