நாடக கலைஞர்கள் ஆட்சியரிடம் மனு..!

திருவள்ளூரில் நாடகக் கலைஞர்கள் நடனம் ஆடியவாறு மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

Update: 2024-06-25 05:15 GMT

மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த நாடக கலைஞர்கள்.

இலவச வீட்டு மனை வழங்கிட கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடக கலைஞர்கள் நாடகம் நடித்தவாறு நடந்து வந்து ஆட்சியாரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு, பழையனூர், ரங்காபுரம், ஜாகீர்மங்கலம், அத்திப்பட்டு, பட்டரைபெருமந்தூர், களக்காட்டூர்,செருக்கனூர் போன்ற சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட தெருக்கூத்து நாடக கலைஞர்கள் குடும்பத்தாருடன் வசித்து வருகிறார்கள்.


இவர்களுக்கு அரசு வழங்கும் இலவச வீட்டுமனை இல்லாததால் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில்இவர்கள் அரசின் இலவச வீட்டுமனை வழங்க கோரி பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் இதுவரையிலும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக திருவள்ளூர் அடுத்த திருவாலங்காடு பகுதியை சேர்ந்த தமிழ்நாடு நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் நல சங்கம் சார்பில் தங்களுக்கு அரசின் இலவச வீட்டுமனை வழங்கக்கோரி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு 50க்கும் மேற்பட்டோர் நாடக கலைஞர்கள் பாட்டு பாடி, நடனமாடி தங்களின் தொடர்பான கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிரபுசங்கரிடம் நேரில் அளித்தனர். அந்த மனுவை பெற்றுக்கொண்டு மாவட்ட ஆட்சியர் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

Tags:    

Similar News