பெரியபாளையத்தில் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்

பெரியபாளையத்தில் எல்லாபுரம் ஒன்றிய அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-12-02 02:15 GMT

பெரியபாளையத்தில் எல்லாபுரம் ஒன்றிய அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கொட்டும் மழையில் நடைபெற்றகு ம்மிடிப்பூண்டி தொகுதி அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பொன்னையன் கலந்து கொண்டார்.

திருவள்ளூர் வடக்கு மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம் மற்றும் எல்லாபுரம் வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மகளிர் அமைப்புகள் மற்றும் பூத் கமிட்டி அமைத்தல் குறித்த ஆலோசனை கூட்டம் கொட்டும் மழையில் நடைபெற்றது.

இதில்,மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமான கட்சி நிர்வாகிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.கும்மிடிப்பூண்டி ஒன்றிய அதிமுக சார்பில் எளாவூர் ஸ்ரீ பாலாஜி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு,கும்முடிபூண்டி ஒன்றிய கழகச் செயலாளர் வி.கோபால் நாயுடு, எல்லாபுரம் வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் பெரியபாளையம் எம்.எஸ்.என் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளரும்,எல்லாபுரம் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளருமான கே.எஸ்.விஜயகுமார் ஆகியோர் தலைமை  வகித்தனர்..

இதில்,பொதுக்குழு உறுப்பினர் ஆர்.அபிராமன்,மாவட்டத் துணைச் செயலாளர்கள் எஸ்.எம்.ஸ்ரீதர், சியாமளாதன்ராஜ், எல்லாபுரம் ஒன்றிய அவை தலைவர் எஸ்.விஜயன்,இணைச் செயலாளர் வித்யாலட்சுமிவேதகிரி, துணைச் செயலாளர்கள் காயத்ரிகோதண்டன்,கே.மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில்,அனைத்துலகை எம்.ஜி.ஆர் மன்ற செயலாளரும்,முன்னாள் அமைச்சரும்,கழக செய்தி தொடர்பாளருமான சி.பொன்னையன்,திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும்,முன்னாள் பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி.பலராமன் ஆகியோர் கலந்து கொண்டு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள தேவையான ஆலோசனைகளையும், சட்டசபை தேர்தலில் கழக வேட்பாளர்கள் மாபெரும் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைக்க நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி  பேசினர்.

இந்நிகழ்ச்சியில்,திருவள்ளூர் வடக்கு மாவட்ட மாணவரணி செயலாளர் சே.ராகேஷ்,எம்.ஜி.ஆர் இளைஞர் அணி மாவட்ட இணைச் செயலாளரும்,கும்முடிப்பூண்டி ஒன்றிய குழு பெருந்தலைவருமான சிவகுமார்,கும்முடிப்பூண்டி பேரூர் கழக செயலாளரும்,பேரூராட்சி மன்ற உறுப்பினருமான ரவி,மாவட்ட கழக துணை செயலாளர்கள் சுண்ணாம்புகுள ம்எஸ்.எம்.ஸ்ரீதர்,சியாமளாதன்ராஜ்,தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவர் எஸ்.பி.அருள், எம்.ஜி.ஆர் இளைஞர் அணி மாவட்ட இணைச் செயலாளர் புது கும்முடிப்பூண்டி இ.ஜி.எம்.கணபதி,இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர்டி.சி.மகேந்திரன்

,அம்மா பேரவை மாவட்ட இணை செயலாளர்கள் பல்லவாடா ஜெ.ரமேஷ்குமார்,எளாவூர் முல்லைவேந்தன், சிறுபான்மை பிரிவு ஆரேன்,மாவட்ட மாணவர் அணி இணை செயலாளர் கே.ஶ்ரீதர்,ரெட்டம்பேடு திருப்பதி,கோபி,கும்முடிப்பூண்டி ஒன்றிய கழக துணை செயலாளரும்,முக்கரம்பாக்கம் ஒன்றிய கவுன்சிலருமான ஏ.டி.நாகராஜ்,ஒன்றிய இளைஞரணி தலைவர் கே.சங்கர்,ஒன்றிய குழு உறுப்பினர் தேவி, கும்முடிப்பூண்டி ஒன்றியதகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வி.பி.ராஜா,ஒன்றிய கழக பொருளாளர் வெங்கடகிருஷ்ணன்,

அண்ணா தொழிற்சங்கம் மாவட்ட கழக துணை செயலாளர் ராஜமாணிக்கம்,புது கும்முடிப்பூண்டி கிளை கழக செயலாளர்கள் வீரன், நாகமணி, பாலு, பாலகிருஷ்ணாபுரம் கிளை கழக செயலாளர் ஸ்டீபன்ராஜ், புதுப்பேட்டை கிளை கழக செயலாளர் தங்கவேல், கும்முடிப்பூண்டி வட்டார கழிவுநீர் வாகன உரிமையாளர்கள் நல சங்கத் தலைவர் சி.ராமலிங்கம்,

ஒன்றிய வர்த்தக அணி துணை செயலாளர் மணி, மேலவை பிரதிநிதி சரவணன்,அம்மா பேரவை மாவட்டத் துணைச் செயலாளர் டி.குமார், மாவட்ட பிரதிநிதி விவேகானந்தன், பெரியபாளையம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மகேஷ்,முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் பார்த்திபன் உள்ளிட்ட மாவட்ட,ஒன்றிய, பேரூர்,கிளைக் கழக நிர்வாகிகள்,சார்பு அணி நிர்வாகிகள்,உள்ளாட்சி அமைப்பு பிரதி நிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.






Tags:    

Similar News