பெரியபாளையம் அருகே கூலித் தொழிலாளி வீட்டில் 30 சவரன் தங்க நகைகள் கொள்ளை

Gold Robbery - பெரியபாளையம் அருகே கூலித் தொழிலாளி வீட்டில் 30 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

Update: 2022-09-06 03:45 GMT

பைல் படம்.

Gold Robbery -திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பவானி அம்மன் கோவில் அருகே உள்ள பாளேஸ்வரம் கிராமத்தில் வசித்து வருபவர் கூலி தொழிலாளியான முனுசாமி. இவர் நேற்றிரவு தமது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். சற்றுப்புழக்கமாக இருந்த காரணத்தினால் வீட்டின் கதவை திறந்து வைத்துவிட்டு முனுசாமி வாசலில் உறங்கி கொண்டிருந்தார்.

காலை குளித்தலை முனுசாமி எழுந்து பார்த்தபோது பீரோ கதவு திறக்கப்பட்டுள்ளது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 30 சவரன் தங்க நகைகள் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்து இது குறித்து ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார் கைரேகை நிபுணர்களை வரவைத்து தடயங்களை சேகரித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News